Last Updated:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவாரா என்கிற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் தவிர்க்க முடியாத வீரராக இருப்பார் என விளையாட்டு விமர்சகர்கள் கூறி உள்ளனர்.
டி20 ஃபார்மேட் அடிப்படையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் இடம் பெற மாட்டார்கள். அவர்கள் ஏற்கனவே ஓய்வை அறிவித்து விட்டதால், இத்தொடரில் புதுமுக வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம் பெறுவதால் அணியின் பலம் அதிகரிக்கும் என விளையாட்டு விமர்சகர்கள் கூறியுள்ளார்கள்.
2023 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஸ் 530 ரன்கள் குவித்திருக்கிறார். இதேபோன்று நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன் டிராபி தொடரில் 243 ரன்கள் எடுத்துள்ளார். 2024-ல் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அணியை சிறப்பாக வழி நடத்தி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்.
இதேபோன்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அவர் 604 ரன்கள் குவித்திருக்கிறார். இத்தகைய காரணங்களால் அவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம் பெற வேண்டும் என விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
அணியின் வெற்றிக்கு தேவைப்படும் ரன்களை கவனத்தில் கொண்டு விளையாடுவதில் சிறந்த வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளார். அவரால் அட்டாக்கிங் முறையில் விளையாட முடியும். சிறந்த பார்ட்னர்ஷிப் கொடுத்து ஆட்டத்தை இறுதிவரை கொண்டு செல்ல முடியும்.
இதேபோன்று எந்த ஒரு பேட்டிங் வரிசையிலும் அவர் சிறப்பாக விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளார். இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய பேட்ஸ்மேன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் முக்கியமானவராக இருக்கிறார்.
August 17, 2025 3:26 PM IST


