Last Updated:
ஆசியா பாரா டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற பிளசிங் சஜீ, கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். பிறவியிலேயே இரு கைகள் இல்லாத நிலையில், கால்களால் சாதனை படைத்தார்.
ஆசியா பாரா டேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
சரல்விளையைச் சேர்ந்த எலியாஸ் திரேஸ்மேரியின் 25 மகனான பிளசிங் சஜீ, பிறவியிலேயே இரு கைகள் இல்லாத நிலையில், கால்களையே மூலதனமாக்கி சாதித்து வருகிறார்.
சிறுவயது முதலே விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்ததால் தனது கால்களைக் கொண்டு பல பயிற்சிகளை மேற்கொண்டு, அதுதொடர்பான வீடியோக்களை யூடியூப்பில் பதிவு செய்து பிரபலமானார்.
இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக டேக்வாண்டோ விளையாட்டில் பயிற்சி எடுத்து வந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு பஞ்சாப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றார். அதன்மூலம் மலேசியா நாட்டில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டிக்குத் தகுதி பெற்றார். இதில், துடிப்புடன் விளையாடி தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
தேசத்திற்கு பெருமை சேர்த்த பிளசிங் சஜீக்கு பாரா டேக்வாண்டோ சங்கத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Kanniyakumari,Tamil Nadu
August 10, 2025 11:49 AM IST


