• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆசிட் வீச்சில் இருந்து தப்பிய 17 வயது சிறுமி… 95.6% மதிப்பெண்கள் பெற்று சாதனை…!

GenevaTimes by GenevaTimes
May 16, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஆசிட் வீச்சில் இருந்து தப்பிய 17 வயது சிறுமி… 95.6% மதிப்பெண்கள் பெற்று சாதனை…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 16, 2025 5:28 PM IST

12ஆம் வகுப்பில், நான் 95.2% மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். நான் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவள், என் இலக்கு IAS அதிகாரியாக வேண்டும் என்பதுதான்” என்று கைஃப் என்ற சிறுமி கூறியுள்ளார்.

News18News18
News18
சண்டிகரைச் சேர்ந்த 17 வயது ‘கைஃப்’ தனது தைரியத்தாலும், கடின உழைப்பாலும் அனைவரையும் ஊக்கப்படுத்தியுள்ளார். ஆசிட் வீச்சில் இருந்து உயிர் தப்பிய கைஃப், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பில் 95.6% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தனது இயலாமை இருந்தபோதிலும் தன்னால் ஏதாவது சாதிக்க முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 95.6% மதிப்பெண்கள் பெற்றுள்ள அவர், தான் ஒரு IAS அதிகாரியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

“நான் ஹரியானாவின் ஹிசாரைச் சேர்ந்தவன். சிபிஎஸ்இ போர்டின் சமீபத்திய அறிவிப்பில், நான் 12ஆம் வகுப்பில் 95.6% மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். என்னுடைய தேர்வு முடிவைக் கேட்டதும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், அதைவிட என் பெற்றோரை மகிழ்விக்க முடிந்ததில் நான் பெருமைப்பட்டேன். அவர்கள் எனக்காக நிறைய தியாகம் செய்துள்ளனர்.

10ஆம் வகுப்பில், நான் 95.2% மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். நான் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவள், என் இலக்கு IAS அதிகாரியாக வேண்டும் என்பதுதான்” என்று கைஃப் கூறியுள்ளார். “பார்வைக் குறைபாடுள்ள பெண்ணாக இருந்ததால், எனது வாழ்க்கையில் நிறைய சவால்கள் இருந்தன. ஆனால், என் பெற்றோரும், ஆசிரியர்களும் அவற்றைக் கடக்க எனக்கு நிறைய உதவினார்கள். எனது படிப்புக்கு முக்கிய ஆதாரம் ஆடியோ மற்றும் பாடப்புத்தகங்கள் தான்” என்று கைஃப் கூறியுள்ளார்.

“நான் ஒரு IAS அதிகாரியாக வேண்டும். நான் என் நாட்டிற்கு நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் சேவை செய்ய விரும்புகிறேன். என்னைப் போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தேவையில்லை, வாய்ப்புகள்தான் தேவை என நான் நம்புகிறேன்” என்றும் கைஃப் கூறியுள்ளார். கைஃப் மீது ஆசிட் வீச்சு நடந்தபோது அவளுக்கு மூன்று வயதுதான். ஹிசாரில் உள்ள புதானாவில் அவரது பக்கத்து வீட்டுக்காரராக இருந்த மூன்று ஆண்கள், அவர் மீது ஆசிட் வீசினர். இதனால் அவர் பார்வையை நிரந்தரமாக இழந்தார், மேலும், அவரது முகம் மற்றும் கைகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன.

சம்பவத்திற்குப் பிறகு, அவருடைய பெற்றோர் தங்கள் மகளைக் காப்பாற்ற தங்களால் இயன்றதைச் செய்தனர். அவர் பல ஆண்டுகளாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, அந்தப் பெண்ணின் சிகிச்சைக்காகச் செலவிட்டனர். அவளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இருப்பினும், அவருடைய உயிர் காப்பாற்றப்பட்டாலும், அவர் பார்வையை இழந்து குருடாகிவிட்டார். மறுபுறம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்குப் பிறகு அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், தண்டனை முடிந்ததை அடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டனர்.

Read More

Previous Post

உயிருடன் இருக்கும்போது மனிதர்களை சுற்றி தென்படும் ஒளி மரணத்தின் பின்னர் மறைவு – ஆய்வு முடிவு!

Next Post

மழைக் காலத்தில் ஜொமோட்டோ, ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்தால் கூடுதல் கட்டணம்! | Zomato Swiggy Subscription Users To Pay Extra Delivery Charges During Rain

Next Post
மழைக் காலத்தில் ஜொமோட்டோ, ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்தால் கூடுதல் கட்டணம்! | Zomato Swiggy Subscription Users To Pay Extra Delivery Charges During Rain

மழைக் காலத்தில் ஜொமோட்டோ, ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்தால் கூடுதல் கட்டணம்! | Zomato Swiggy Subscription Users To Pay Extra Delivery Charges During Rain

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin