மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வரும் ஆக.21 ஆம் தேதியன்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து உரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜெய் லாவ்ரோவை வரும் ஆக.21 ஆம் தேதி நேரில் சந்தித்து உரையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்தச் சந்திப்பானது மாஸ்கோவில் நடைபெறும் எனவும், இதில் சர்வதேச கட்டமைப்புகளுக்கு உட்பட்டு இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகள் குறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

