அவுஸ்திரேலியாவில் பிறந்து வாழும் இலங்கையர்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சுமார் 184,800 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலிய புள்ளியியல் பணியகம் (ABS) வெளியிட்டுள்ள புதிய தரவுகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2023 ஜூன் மாதத்தில் 158,300 ஆக இருந்த எண்ணிக்கை 2024 ஜூன் மாதத்தில் 172,800 ஆக அதிகரித்தமை குறிப்பிடத்தக்க உயர்வை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவில் பிறந்தவர்கள் முதலிடம்
தற்போது அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டில் பிறந்த அதிக மக்கள்தொகை கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ளது.
ஒட்டுமொத்தமாக, அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கை மக்களின் எண்ணிக்கை கடந்த தசாப்தத்தில் குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளது.
2013 ஆம் ஆண்டில் 110,000 க்கும் சற்று அதிகமாக இருந்த இந்த எண்ணிக்கை, 2025 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 185,000 ஆக உயர்ந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டில் பிறந்தவர்களில் அதிகபட்சமாக இந்தியாவில் பிறந்தவர்கள் முதலிடத்தில் உள்ளதுடன் அவர்களைத் தொடர்ந்து இங்கிலாந்தில் பிறந்தவர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

