Last Updated:
இரு நாடுகளை சமாதானப்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல உலக தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர்
இந்திய குடிமக்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுரை வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் ஏற்பட்டிருந்தது.
ஈரான் நாடு அணு ஆயுதங்களை அதிகரிப்பது என்பது தங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கூறி இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் தாக்குதல் நடத்துவதால் இரு தரப்புக்கும் பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் ஏற்பட்டு வருகிறது.
இரு நாடுகளை சமாதானப்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல உலக தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர்.. தொடர்ந்து இரு நாடுகளின் தலைவர்களும் மோதலை அதிகப்படுத்தும் விதமாக கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் ஈரான் நாட்டின் முக்கிய ராணுவ தலைவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும் ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது. கடந்த மாதத்தில் மட்டும் இரு நாடுகளுக்கு இடையே மொத்தம் 12 நாட்கள் சண்டை நடந்தது. இந்த நிலையில் இந்திய குடிமக்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுரை வெளியிட்டு இருக்கிறது. இந்திய தரப்பு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-
பாதுகாப்பு காரணங்களை கவனத்தில் கொண்டு மிகவும் அத்தியாவசிய தேவையை தவிர்த்து மற்ற எதற்காகவும் ஈரான் நாட்டிற்கு இந்திய குடிமக்கள் செல்ல வேண்டாம்.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லைன் என்ற தாக்குதலை கடந்த மாதம் தொடங்கியிருந்தது. 12 நாட்கள் சண்டைக்குப் பிறகு இரு நாடுகளும் அமைதி உடன்படிக்கைக்கு ஒத்துக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். தற்போது சண்டை நிறுத்தப்பட்டிருந்தாலும் எந்த நேரத்திலும் இரு தரப்பும் மோதிக் கொள்ளக்கூடிய சூழல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
July 16, 2025 6:11 PM IST
“அவசியமின்றி இதனை செய்ய வேண்டாம்..” – இந்திய குடிமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்ட மத்திய அரசு..


