Last Updated:
சுகேஷ் சந்திரா, தனது காதலியான ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு காதலர் தின பரிசாக 30 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டரை வழங்கி உள்ளார்.
200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரா, தனது காதலி ஜாக்குலின் பெர்னான்டஸுக்கு 30 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டரை காதலர் தின பரிசாக அளித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் பெற்றுத் தருவதாக பணம் பெற்றது உள்பட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக டெல்லியைச் சேர்ந்த சுகேஷ் சந்திராவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

சுகேஷ் சந்திராவுடன் நெருக்கமாக பழகியது தொடர்பாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடமும் அவ்வப்போது காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தற்போது டெல்லி மந்தோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரா, தனது காதலியான ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு காதலர் தின பரிசாக 30 கோடி ரூபாய் மதிப்பிலான Airbus H வகை ஹெலிகாப்டரை வழங்கி உள்ளார். ஜாக்குலின் பெர்னாண்டஸின் வசதிக்காக அவரது பெயர் பொறித்த பல்வேறு வேலைப்பாடுகளுடன் கூடிய ஹெலிகாப்டரை பரிசாக சுகேஷ் சந்திரா வழங்கி உள்ளார். மேலும், ஜாக்குலின் பெர்னாண்டஸை அழகிய பொம்மை என குறிப்பிட்டு சிறையில் உள்ள சுகேஷ் சந்திரா கடிதம் அனுப்பி உள்ளார்.
“அழகிய பொம்மையே…” – சிறையில் இருந்தபடியே ரூ.30 கோடி ஹெலிகாப்டரை காதலிக்கு பரிசளித்த சுகேஷ் சந்திரா!


