திறமைகள் ஏராளம் இருந்தும் போதிய ஆதரவு இல்லாமல் தடுமாறி வந்த இளம் வீராங்கனையின் ஒலிம்பிக் போட்டி கனவை நிறைவேற்றியுள்ளது ரிலையன்ஸ் அறக்கட்டளை. இதற்காக ரிலையன்ஸ் அறக்கட்டளைக்கு பாராட்டுகள குவிகிறது.
அறக்கட்டளையின் தலைராக செயல்பட்டு வரும் நீடா அம்பானி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார். அவரது தீவிர முயற்சி காரணமாக ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான அங்கீகாரங்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள், ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஒலிம்பிக் போட்டிகளில் முதன் முறையாக இந்தியா ஹவுஸ் ஒலிம்பிக் வளாகத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இதற்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் மேற்கொண்ட முயற்சிகள் முக்கிய காரணமாகும். இந்த ஒலிம்பிக் தொடரில் 6 எடைப் பிரிவுகளில் 5 பெண்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் அரியானா மாநிலம் ரோதக்கை சேர்ந்த ரித்திகா ஹூடா என்பவரும் ஒருவர்.
ஏழ்மை குடும்பத்தை பின்னணியாக கொண்ட இவருக்கு அபாரமான திறமை உள்ளதை கண்டறிந்த ரிலையன்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகள், அவருக்கு தேவையான அனைத்து ஆதரவையும் அளித்தனர். ரித்திகா கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக மல்யுத்தம் பயின்று வருகிறார்.
இந்த சாதனையால் ரித்திகாவின் குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் ரித்திகா கடுமையாக உழைத்த விதமும், மல்யுத்தத்தின் மீதான அவரது நிலையான ஆர்வமும் அவரை உலகின் மிகவும் மதிப்புமிக்க போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த வழிவகுத்ததாக அவர்கள் கூறுகிறார்கள். தற்போது ரிலையன்ஸ் அறக்கட்டளை ரித்திகாவிற்கு எல்லா வகையிலும் உதவி செய்து வருகிறது.
விளையாட்டுக்கான ஆதரவு எந்த ஒரு வீராங்கனைக்கும் மிகவும் முக்கியமானது என்றும், இன்று தனது வெற்றிக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளது என்றும் ரித்திகா கூறுகிறார். தான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன் என்றும், ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக நிச்சயம் பதக்கம் வெல்வேன் என்றும் ரித்திகா நம்பிக்கை தெரிவித்தார்.
ரிலையன்ஸ் அறக்கட்டளை ரித்திகா ஹூடாவுக்கு உணவு, ஊட்டச்சத்து மற்றும் பிசியோதெரபி தவிர நிதியுதவி அளித்து வருகிறது. ரிலையன்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகளும் வீரர்களின் செயல்திறனைக் கண்காணித்து, அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்கின்றனர்.
இதையும் படிங்க – ஒரே ஓவரில் 43 ரன்கள்.. 134 ஆண்டுக்கால கிரிக்கெட்டில் மோசமான சாதனை – வீடியோ
அறக்கட்டளையின் பிரதிநிதி ஸ்ருதி, ரோதக்கில் தங்கியிருந்து ரித்திகா ஹூடாவுக்கு அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் உதவிகளை நேரில் வழங்கி வருகிறார். பயிற்சி களத்தில் ரித்திகாவின் செயல்பாடுகள் இந்தியாவுக்கு நிச்சயம் பதக்கத்தை வென்று தரும் என ரிலையன்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
