டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை காவலில் இருந்து விடுவிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தன்னை விடுதலை செய்ய கோரி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு ஏப். 03-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது மதுபான கொள்கை வழக்கில் நடந்த முறைகேடு தொடர்பாக 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி ஆஜராகாததால் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:
பெங்களூரு குண்டு வெடிப்பு – தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை
தன்னை கைது செய்ததை எதிர்த்தும் உடனடியாக விடுதலை செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி 7 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப். 03-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…