ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ரஜமகா விகாரையின் ஸ்ரீ தளதா பெரஹரா – 2026, நடத்துவது குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (23) நடைபெற்றது.
இம்முறை எசள நிகழ்வை முன்னிட்டு 126 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்படும் கோட்டை ரஜமகா விகாரையின் ஸ்ரீ தளதா பெரஹரா, செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி இரவு 8 மணி முதல் வீதி உலா வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோட்டை ஸ்ரீ தளதா பெரஹராவை விமர்சையாக நடத்துவதற்கான அனுசரனைகளைப் பெற்றுக்கொள்வது மற்றும் அது தொடர்பான தயார்நிலை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பெரஹெராவை வெற்றிகரமாக நடத்துவதற்காக அனுசரனை வழங்கும் அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் நிதிசார் அனுசரனை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (a)


