Last Updated:
இந்தச் சந்திப்பில், 2026 முதல் 2031 வரையிலான காலத்திற்கான இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புதிய வரைபடம் இறுதி செய்யப்பட்டது.
இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சைப்ரஸ் நாட்டு அதிபர் (Nikos Christodoulides) நிகோஸ் கிறிஸ்டோடுலைடெஸை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராஷ்டிரபதி பவனில் வரவேற்று, விருந்து அளித்தார்.
பாதுகாப்பு, தொழில்நுட்பம், செமிகண்டக்டர், பசுமை ஆற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முன்னுரிமைத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு புதிய கட்டத்தை எட்டியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக குடியரசுத் தலைவர் முர்மு தெரிவித்தார்.
#WATCH | Delhi: President Droupadi Murmu received Nikos Christodoulides, President of the Republic of Cyprus, at Rashtrapati Bhavan today. She also hosted a banquet in his honour. pic.twitter.com/gmfcnTSFVC
— ANI (@ANI) May 22, 2026
முன்னதாக, சைப்ரஸ் அதிபர் நிகோஸ் பிரதமர் நரேந்திர மோடியுடன் உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முக்கியப் பகுதியாக, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கும், பயங்கரவாத அமைப்புகளுக்குக் நிதி கிடைப்பதைத் தடுப்பதற்கும் இரு நாடுகளும் இணைந்து ‘கூட்டுப் பணிக்குழு’ ஒன்றை அமைக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தச் சந்திப்பில், 2026 முதல் 2031 வரையிலான காலத்திற்கான இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புதிய வரைபடம் இறுதி செய்யப்பட்டது. மேலும், ஐநா பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்குச் சைப்ரஸ் தனது முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
May 23, 2026 11:22 AM IST


