• Login
Friday, August 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அரசு ஊழியர்களைத் தலைமைச் செயலாளரின் பேரணி எச்சரிக்கையை  மீறச் சொல்லுகிறது; சட்ட உதவியும் வழங்கத் திட்டமிட்டு உள்ளது – LFL – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
July 22, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
அரசு ஊழியர்களைத் தலைமைச் செயலாளரின் பேரணி எச்சரிக்கையை  மீறச் சொல்லுகிறது; சட்ட உதவியும் வழங்கத் திட்டமிட்டு உள்ளது – LFL – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்த வாரம் திட்டமிடப்பட்ட ஹிம்புனான் துருன் அன்வார்(Himpunan Turun Anwar) பேரணியில் கலந்து கொள்வதற்கு எதிராக அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரின் சமீபத்திய எச்சரிக்கையை மீறிச் செயல்படுமாறு அரசு ஊழியர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை ஷம்சுல் அஸ்ரி அபு பக்கரின் எச்சரிக்கையை “சட்டவிரோதமானது” என்றும் அரசாங்கத்தின் “அவநம்பிக்கையான நடவடிக்கை” என்றும் லாயர்ஸ் ஃபார் லிபர்ட்டி (Lawyers for Liberty) இயக்குனர் ஜைத் மாலேக் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“தலைமைச் செயலாளரின் அறிக்கை சட்டத்தில் எந்த அடிப்படையும் இல்லாதது மற்றும் கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு முற்றிலும் முரணானது. நமது அரசியலமைப்பின் பிரிவு 10(1)(a) மற்றும் (b) ஆகியவை கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையையும் அமைதியாகக்கூடும் உரிமையையும் உறுதி செய்கின்றன”.

“இது நாட்டின் மிக உயர்ந்த சட்டம், இதை ஷம்சுல் நிலைநிறுத்துவதாகச் சத்தியம் செய்கிறார். அவ்வாறு செய்வதாக அவர் தனது சத்தியத்தை மறந்துவிட்டாரா? அரசாங்கத்தின் கட்டளைப்படி ஒடுக்குவது அல்ல, அரசு ஊழியர்களைப் பாதுகாப்பது அவரது கடமை.”

“எனவே, அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் வழங்கிய சட்டவிரோத உத்தரவைப் புறக்கணிக்குமாறு அனைத்து அரசு ஊழியர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்தச் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பேரணியில் அரசு ஊழியர்கள் பங்கேற்க விரும்பினால், அது சட்டப்பூர்வமானது மற்றும் பொருத்தமானது,” என்று ஜைட் கூறினார்.

அரசின் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபுபக்கர்

“சனிக்கிழமையன்று எந்தவொரு அரசு ஊழியரும் தங்கள் அரசியலமைப்பு உரிமைகளைப் பயன்படுத்துவதற்காக எந்தவொரு நடவடிக்கைக்கும் உட்படுத்தப்பட்டால், அவர்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஜூலை 26 அன்று நடைபெறும் பேரணியில் அரசு ஊழியர்கள் பங்கேற்க வேண்டாம் என்று ஷம்சுல் நினைவூட்டியதாகப் பெர்னாமா நேற்று செய்தி வெளியிட்டது.

ருகுன் நெகாராவில் கூறப்பட்டுள்ள “ராஜாவிற்கும் நாட்டிற்கும் விசுவாசம்” என்ற கொள்கைக்கு முரணாக இருக்கும் என்பதால், அரசு ஊழியர்கள் அத்தகைய கூட்டத்தில் சேருவது பொருத்தமற்றது என்று அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.

“அவர்கள் போகக் கூடாது. அவர்கள் அரசு ஊழியர்கள், (அதனால்) அவர்கள் எப்படி சேர முடியும்? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், நாங்கள் ராஜாவுக்கும் நாட்டுக்கும் விசுவாசமாக இருப்போம் என்ற உறுதிமொழியை ஓதுகிறோம். அவர்கள் மறந்துவிட்டார்களா? ராஜாவுக்கும் நாட்டிற்கும் விசுவாசமாக இருங்கள்,” என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.

‘அபத்தம், பிரதமர் ஒரு மன்னர் அல்ல’

இருப்பினும், ஜைத் இந்த அறிக்கையை “வெளிப்படையாக அபத்தமானது” என்று சாடினார்.

“பிரதமரை விமர்சிப்பது அரசு ஊழியர்களின் ஜனநாயக உரிமை, நாட்டிற்கு விசுவாசமற்ற செயல் அல்ல.

“பிரதமர் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரி, ஒரு மன்னர் அல்ல. அவரது ஆணை மக்களால் வழங்கப்படுகிறது, மேலும் மக்களால் அவர்களின் ஜனநாயக உரிமையைப் போலவே பறிக்கப்படலாம்,” என்று அவர் கூறினார்.

பிரதமர் அன்வார் இப்ராஹிம்

விமர்சனம், கருத்து வேறுபாடு மற்றும் எதிர்ப்பு ஆகியவை ஜனநாயகத்தின் இயல்பானவை என்றும், அவற்றை விசுவாசமின்மையாக வகைப்படுத்தக் கூடாது என்றும், இது மலேசியாவின் அரசியலமைப்பு கட்டமைப்பின் அடிப்படை தவறான புரிதலைக் குறிக்கும் என்றும் ஜைத் அரசாங்கத்திற்கு நினைவூட்டினார்.

சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்குக் கோலாலம்பூர் நகர மையத்தில் திட்டமிடப்பட்டுள்ள போராட்டம், பிரதமர் அன்வார் இப்ராஹிமின் ராஜினாமாவைக் கோரி பாஸ் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் ஏற்பாடு செய்து வரும் சிறிய ஆர்ப்பாட்டங்களின் உச்சக்கட்டமாகும்.

முன்னதாக, பாஸ் உலமா தலைவர் அஹ்மத் யஹாயா, அனைத்து மலேசியர்களும் பேரணியில் சேருமாறு அழைப்பு விடுத்தார், இது ஒரு தார்மீக மற்றும் மதக் கடமை என்று விவரித்தார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்காகவும், பொருளாதாரத்தை ஊக்குவிப்பதிலும், நாட்டின் நிர்வாகத்தை உறுதிப்படுத்தத் தவறியதற்காகவும் அன்வார் பதவி விலக வேண்டும் என்று போகோக் சேனா எம்.பி.-யுமான அஹ்மத் கூறினார்.

நாட்டை ஒரு பேருந்தாக அவர் உருவகப்படுத்தி, அதைக் கவனக்குறைவாக ஓட்டுவதன் மூலம் அதன் பயணிகள் ஆகிய பொதுமக்கள் ஆபத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

Like this:

Like Loading…



Read More

Previous Post

வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த வெள்ளியின் விலை…

Next Post

வேலையிட காயம்… ஊழியர் நாடகமாடியதாக கூறிய முதலாளி மரணம் – களமிறங்கிய MOM & போலீஸ்

Next Post
வேலையிட காயம்… ஊழியர் நாடகமாடியதாக கூறிய முதலாளி மரணம் – களமிறங்கிய MOM & போலீஸ்

வேலையிட காயம்… ஊழியர் நாடகமாடியதாக கூறிய முதலாளி மரணம் - களமிறங்கிய MOM & போலீஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin