• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சுக்கு கண்டனம்: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் தள்ளிவைப்பு | Parliament adjourned due to opposition unrest

GenevaTimes by GenevaTimes
December 19, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சுக்கு கண்டனம்: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் தள்ளிவைப்பு | Parliament adjourned due to opposition unrest
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: சட்ட மேதை அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவமதித்​ததாக நாடாளு​மன்​றத்​தில் எதிர்க்​கட்​சிகள் அமளி​யில் ஈடுபட்டன. இதையடுத்து 2 அவைகளும் நாள் முழு​வதும் தள்ளிவைக்​கப்​பட்டன. அம்பேத்கர் குறித்து அமைச்சர் அமித் ஷா பேசி​யதற்கு எதிர்க்​கட்​சிகள் கடும் கண்டனத்​தை தெரி​வித்தன.

அரசி​யலமைப்பு உருவாக்​கப்​பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்​ததையொட்டி, மாநிலங்​களவை​யில் கடந்த செவ்​வாய்க்​கிழமை விவாதம் நடைபெற்​றது. விவாதத்​தின் முடி​வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்​போது, ‘அம்​பேத்​கர்.. அம்பேத்​கர்.. அம்பேத்​கர்’ என முழக்​கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்​டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்​திருந்​தால், சொர்க்​கத்​தில் அவர்​களுக்கு இடம் கிடைத்​திருக்​கும். அம்பேத்​கரின் பெயரை காங்​கிரஸ் எடுத்​துக்​கொள்​வ​தில் பாஜக மகிழ்ச்​சி​யடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்​வுகள் குறித்​தும் காங்​கிரஸ் பேச வேண்​டும்” என்றார்.

இந்நிலை​யில் அம்பேத்கர் குறித்த மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்​சுக்கு எதிர்க்​கட்​சிகள் கடும் கண்டனத்​தை தெரி​வித்து வருகின்றன. இதுகுறித்து மக்களவை எதிர்க்​கட்​சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்​தில் கூறும்​போது, “மனுஸ்​மிரு​தியை நம்புவோருக்கு அம்பேத்​கருடன் நிச்​சயம் பிரச்​சினை இருக்​கும்” என்று பதிவிட்​டுள்​ளார்.

இந்நிலை​யில், அம்பேத்கரை மத்திய அமைச்சர் அமித் ஷா அவமதித்து​விட்​டதாக கூறி, நாடாளு​மன்ற வளாகத்​தில் நேற்று காங்​கிரஸ் தலைவர் மல்லி​கார்ஜுன கார்கே, எதிர்க்​கட்​சித் தலைவர் ராகுல் காந்தி தலைமை​யில் பல்வேறு கட்சிகளின் உறுப்​பினர்கள் அம்பேத்​கரின் புகைப்​படத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்​தினர்.

இந்நிலை​யில் நேற்று காலை மக்களவை தொடங்​கிய​போது, “ஜெய் பீம், ஜெய் பீம்” என்று எதிர்க்​கட்சி எம்.பி.க்கள் அவையில் முழக்​கமிட்​டனர். இதனால் பிற்​பகல் 2 மணிவரை தள்ளிவைக்​கப்​படு​வதாக அவைத் தலைவர் அறிவித்​தார். அதன் பிறகும் அமளி தொடரவே அவையை நாள் முழு​வதும் மக்களவை சபாநாயகர் தள்ளி​வைத்​தார்.

இதேபோன்று மாநிலங்​களவை​யிலும் எதிர்க்​கட்சி எம்.பி.க்கள் அமளி​யில் ஈடுபட்​டனர். அப்போது அவையில், மாநிலங்​களவை எதிர்க்​கட்​சித் தலைவரும், காங்​கிரஸ் தேசியத் தலைவருமான மல்லி​கார்ஜுன கார்கே, அம்பேத்​கரின் புகைப்படத்தை எடுத்து உயர்த்திக் காட்​டி​னார். இதையடுத்து அவையில் கூச்​சலும், குழப்​ப​மும் நிலவியது. இதைத் தொடர்ந்து அவையை பிற்​பகல் 2 மணி வரை மாநிலங்​கள​வைத் தலைவர் ஜகதீப் தன்கர் தள்ளி​வைத்​தார். பிற்​பகல் 2 மணிக்கு அவை கூடிய​போது, அமளி தொடர்ந்​த​தால் அவை நாள் முழு​வதும் தள்ளிவைக்​கப்​பட்​டது.

இதற்​கிடையே, அமித் ஷா செய்தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: அம்பேத்கர் குறித்த பேச்​சுக்கு கண்டனம் தெரிவிக்​கும் காங்​கிரஸ் தலைவர், என்னை ராஜினாமா செய்யசொல்​கிறார். பட்டியலின பிரிவைச் சேர்ந்​தவராக இருக்​கும் காங்​கிரஸ் தலைவர் கார்கே, காங்​கிரஸ் கட்சி​யின் மோசமான இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்க கூடாது.

நான் ராஜினாமா செய்​தா​லும், அடுத்த 15 ஆண்டு​களுக்கு நாடாளு​மன்​றத்​தில் காங்​கிரஸ் கட்சி எதிர்க்​கட்​சி​யாகத்​தான் தொடர வேண்​டி​யிருக்​கும். மக்களவை எதிர்க்​கட்​சித் தலைவர் ராகுல் காந்​தி​யின் அழுத்தம் காரண​மாகவே, கார்கே இவ்வாறு பேசி வருகிறார். ராகுல் காந்​தி​யின் அழுத்​தத்​துக்கு நீங்​களும் (கார்கே) பணிந்தது எனக்கு வருத்தம் அளிக்​கிறது.

நாடாளு​மன்​றத்​தில் எனது பேச்சை காங்​கிரஸ் கட்சி​யினர் திரித்​துக் கூறுகின்​றனர். எனது பேச்​சின் ஒரு பகுதியை மட்டும் வைத்து பேசுவதா? அம்பேத்​கரின் கொள்​களைகளை உயர்த்திப் பிடிப்பது பிரதமர் நரேந்திர மோடி தலை​மையிலான பாஜக அரசு​தான். அம்​பேத்​கரின் புகழை உல​கம் ​முழு​வதும் நிலைநாட்​டியது பாஜக அரசு​தான். நாங்​கள் அம்​பேத்​கருக்கு எ​திரானவர்​கள் அல்ல. இவ்​வாறு மத்​திய அமைச்​சர்​ அமித்​ ஷா பேசினார்​.



Read More

Previous Post

எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Next Post

மும்பையில் படகு கவிழ்ந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு | Makkal Osai

Next Post
மும்பையில் படகு கவிழ்ந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு | Makkal Osai

மும்பையில் படகு கவிழ்ந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin