• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு…!

GenevaTimes by GenevaTimes
December 15, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன
தேரருக்கு பிடிவிறாந்து பிறப்பித்து வெளிநாட்டுக்கு செல்வதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.



குறித்த உத்தரவை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (15) பிறப்பித்துள்ளார்.


இந்தநிலையில், வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

தமிழ் மக்கள்



கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவியின் போது
வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக்
கொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு...! | Arrest Warrant Issued For Ambitiya Sumanarathna




இதையடுத்து தேரர் தெரிவித்த இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக
2023-10-27 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை காவல் நிலையத்தில் சட்டத்தரணி
தனுக்க றனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்ததுடன் சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச
உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.



இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள்
அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை
கைது செய்யுமாறு அறிவுறத்தல் வழங்கியது.

பயண தடை




இந்தநிலையில் குறித்த வழக்கு கடந்த 8-12-205 திங்கட்கிழமை மட்டக்களப்பு
நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குறித்த தேரர் நீதிமன்றில்
சமூகமளிக்காத நிலையில் வழக்கு தொடுநர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி சட்டமா
அதிபர் திணைக்களத்தின் அறிவுரையின் படி குறித்த தேரரை இதுவரை கைது
செய்யப்படவில்லை என நீதவான் கவனத்துக்கு கொண்டு வந்தார்.


இதையடுத்து நீதவான் அடுத்த வழக்கு தவணை எதிர்வரும் 15 ஆம் திகதி முன்னர்
குறித்த தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு
உத்தரவிட்டதுடன் குறித்த தேரரை இதுவரை நீதிமன்றில் ஏன் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
எடுக்க வில்லை என மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அறிக்கை
சமர்ப்பிக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு...! | Arrest Warrant Issued For Ambitiya Sumanarathna

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்டபோது தேரர் முன்னலையாகாத
நிலையில் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சார்பாக முதலாம் தரம் கொண்ட உதவி
காவல்துறை அத்தியட்சகர் முன்னிலையாகி, மட்டு தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி முன்னலையாகி
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும்
அதனால் நீதிமன்றில் இன்று முன்னிலையாக முடியவில்லை எனவும் குறித்த தேரர்
தங்கியிருக்கும் மற்றும் மறைந்திருக்கும் இடம் என சந்தேகிக்கப்படும் மங்களகம
கௌவ்லியாமடு மற்றும் சின்னவத்தை விகாரை பகுதிக்கு தேடிச் சென்றுள்ளதாகவும்
அவர் அங்கு இல்லை எனவும் அவர் மறைந்திருக்கும் இடத்தை தேடி வருவதாகவும்
நீதவானிடம் தெரிவித்துள்ளார்.



இதையடுத்து நீதவான் தேரரை கைது செய்வதற்காக நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பித்து
அவர் வெளிநாடு செல்வதற்கு பயண தடை விதித்து கட்டனை பிறப்பித்து உத்தரவிட்டு
எதிர்வரும் ஜனவரி 26 திகதி வழக்கை ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

காவலில் மரணம் தொடர்பான விசாரணையில் தாமதங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை – கோபிந்த் – Malaysiakini

Next Post

2 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை: தூக்கு தண்டனை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதி | Makkal Osai

Next Post
2 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை: தூக்கு தண்டனை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதி | Makkal Osai

2 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை: தூக்கு தண்டனை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin