சர்வதேச தலைவராக திகழும் இந்திய பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை பெற தகுதியானவர் என்று பிரபல முதலீட்டாளர் மார்க் மோபியஸ் தெரிவித்துள்ளார்.
88 வயதாகும் மார்க் மோபியஸ் உலகின் மிகச்சிறந்த முதலீட்டாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அமெரிக்காவில் பிறந்து ஜெர்மன் நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ள மோபியஸ் சர்வதேச விவகாரங்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திற்கு மார்க் மோபியஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
தற்போதைய மேற்கு ஆசியா மோதல் மற்றும் நடந்துகொண்டிருக்கும் ரஷ்யா-உக்ரைன் போர் போன்றவற்றில் பிரதமர் மோடி மிக முக்கியமான சமாதானம் செய்பவராக மாற முடியும்.
பிரதமர் மோடி ஒரு சிறந்த தலைவர் மற்றும் சிறந்த மனிதர். சர்வதேச அளவில் அவரது பங்கு, இன்னும் முக்கியத்துவம் பெறும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவரால் உலகளவில் அரசியல் தளத்தில் அனைத்து தரப்புடனும் உரையாட முடியும்.
என்னைப் பொருத்தளவில் அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதற்கு பிரதமர் மோடி தகுதியானவர். நடுநிலை மற்றும் அனைவருக்கும் நியாயமாக இருப்பதில் இந்தியா தனது திறனை வெளிப்படுத்தியுள்ளது. உலகளாவிய அரங்கில் அமைதிக்கான மத்தியஸ்தராக செயல்பட மிகவும் நல்ல நிலையில் இந்தியா உள்ளது. பிரதமர் மோடி இன்று உலகில் ஒரு முக்கிய மத்தியஸ்தராக இருக்க மிகவும் தகுதியானவர்.
ரஷ்யா-உக்ரைன் மோதலில் நடுநிலையாக காணப்பட்ட போதிலும், பிரதமர் மோடி தொடர்ந்து அமைதியான தீர்வையே வலியுறுத்தினார். 1992ல் இராஜ ரீதியிலான உறவுகளை ஏற்படுத்திய பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் ஆகஸ்ட் மாதம் உக்ரைனுக்கு மேற்கொண்ட முதல் பயணமாக மோடியின் பயணம் அமைந்தது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் அமைதியை மேம்படுத்துவதில் இந்தியாவின் தீவிர ஈடுபாட்டை இந்த பயணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. என்று தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)