அமலாக்கத்துறை சோதனை!
கடந்த ஜனவரி 03ஆம் தேதி அன்று வேலூர் மாவட்டம், காட்பாடி, காந்தி நகரில் உள்ள திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இல்லம், வேலூர் எம்.பி கதிர் ஆனந்திற்கு தொடர்பு உடைய கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனின் இல்லம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை 3 நாட்கள் வரை நீண்டது. 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அமைச்சர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்திற்கு தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அமலாக்கத்துறை சோதனை நடப்பதாக அப்போது கூறப்பட்டது.

