• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை | Supreme Court stays HC order reversing discharge of Periyasamy case

GenevaTimes by GenevaTimes
August 18, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை | Supreme Court stays HC order reversing discharge of Periyasamy case
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: அமைச்​சர் ஐ.பெரிய​சாமி மற்​றும் அவரது குடும்​பத்​தினருக்கு எதி​ரான சொத்​துக் குவிப்பு வழக்​கின் மறு​வி​சா​ரணைக்கு இடைக்​காலத் தடை விதித்து உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழக ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சர் ஐ.பெரிய​சாமி, கடந்த 2006-11 திமுக ஆட்​சி​யில் வீட்​டு​வச​தித் துறை அமைச்​ச​ராக இருந்​தார். அப்​போது, வரு​மானத்​துக்கு அதி​க​மாக ரூ.2 கோடிக்கு சொத்​துக் குவிப்​பில் ஈடு​பட்​ட​தாக புகார் எழுந்​தது. இதுதொடர்​பாக பெரிய​சாமி, அவரது மனைவி சுசீலா, மகன் ஐ.பி.செந்​தில்​கு​மார் எம்​எல்ஏ, மற்​றொரு மகன் ஐ.பி.பிரபு ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்​தனர். இந்த வழக்கை விசா​ரித்த திண்​டுக்​கல் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றம், அவர்​கள் 4 பேரை​யும் விடு​வித்து உத்​தர​விட்​டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் திண்​டுக்​கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை தரப்​பில் கடந்த 2018-ம் ஆண்டு மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இதை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், அமைச்​சர் உள்​ளிட்ட 4 பேரை​யும் விடு​வித்து திண்​டுக்​கல் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்​தது. மேலும், இந்த வழக்​கில் மீண்​டும் குற்​றச்​சாட்டு பதிவு செய்து தினந்​தோறும் என்ற அடிப்​படை​யில் விசா​ரணை நடத்​தி, வழக்கை 6 மாதத்​தில் முடிக்​கு​மாறு, எம்​.பி. எம்​எல்​ஏக்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் திண்​டுக்​கல் மாவட்ட சிறப்பு நீதி​மன்​றத்​துக்கு உத்​தர​விட்​டது.

உயர் நீதி​மன்​றத்​தின் இந்த உத்​தர​வுக்கு இடைக்​காலத் தடை கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் அமைச்​சர் ஐ.பெரிய​சாமி சார்​பில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. அதில் கூறப்​பட்​டிருந்​த​தாவது: அரசி​யல் ரீதி​யாக பழி​வாங்​கும் நோக்​கில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. லஞ்ச ஒழிப்​புத் துறை ஆவணங்​களில் சொத்​துக் குவிப்பு புகாரை நிரூபிப்​ப​தற்​கான முகாந்​திரம் இல்​லை.

மனு​தா​ரர் மற்​றும் குடும்​பத்​தினரின் வரு​வாய் தவறாக கணக்​கிடப்​பட்டு இருப்​பதை பரிசீலித்​து​தான் சிறப்பு நீதி​மன்​றம் அனை​வரை​யும் விடு​வித்​தது. அந்த உத்​தரவை உயர் நீதி​மன்​றம் ரத்து செய்​தது ஏற்​புடையது அல்ல. மனு​தா​ரருக்கு எதி​ராக வழக்கு பதிவு செய்ய ஆளுநருக்கு பதிலாக, சட்​டப்​பேர​வைத் தலை​வரிடம் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் அனு​மதி பெற்​றதும் சரி​யான நடை​முறை அல்ல. எனவே, வழக்கை 6 மாதங்​களில் விசா​ரித்து முடிக்க வேண்​டும் என்ற உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு இடைக்​காலத் தடை விதிக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டிருந்​தது.

உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் தீபாங்​கர் தத்​தா, அகஸ்​டின் ஜார்ஜ் மாசி அமர்​வில் இந்த மேல்​முறை​யீட்டு மனு மீதான விசா​ரணை நடந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர்​கள் வி.கிரி. முத்​துகணேச பாண்​டியன், மாளவிகா ஜெயந்த் ஆகியோர் ஆஜராகி வாதிட்​டனர்.இதையடுத்​து, மறு​வி​சா​ரணை தொடர்​பான சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு நீதிப​தி​கள் இடைக்​காலத் தடை விதித்​தனர். இந்த வழக்​கில் தமிழக அரசு பதில் அளிக்​க​வும் உத்​தர​விட்​டனர். ஏற்​கெனவே வீட்டு மனை ஒதுக்​கீடு தொடர்​பாக ஐ.பெரிய​சாமி தொடர்ந்த மேல்​முறை​யீ்ட்டு மனுவுடன், இந்த வழக்​கை​யும் சேர்த்து விசா​ரணையை தள்​ளி

வைத்​தனர்.



Read More

Previous Post

ஓய்வூதியத்தை இழக்கப்போகும் ஆறு கட்சிகளின் தலைவர்கள்

Next Post

மாணவர்கள் கொடுமை குறித்த மாமன்னரின் ஆணையை கல்வி அமைச்சகம் நிறைவேற்றும் | Makkal Osai

Next Post
மாணவர்கள் கொடுமை குறித்த மாமன்னரின் ஆணையை கல்வி அமைச்சகம் நிறைவேற்றும் | Makkal Osai

மாணவர்கள் கொடுமை குறித்த மாமன்னரின் ஆணையை கல்வி அமைச்சகம் நிறைவேற்றும் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin