திருச்சூர்:
தனக்கு மத்திய அமைச்சராக வரும் விரும்பம் இல்லை என்று பாஜக சார்பில் கேரளாவில் வெற்றி பெற்ற நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் முதல் பாஜக எம்.பி.யான சுரேஷ் கோபி இணையமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்தப் பதவியை ஏற்க விரும்பமில்லை என்றும், ஒரு எம்.பி.யாக என்னால் அனைத்து அமைச்சகங்களுடனும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும் என்றும் கூறிய அவர், தன்னால் முடிந்தவரை தமிழகத்துக்காகவும் உழைப்பேன் என்ரம் அவர் சொன்னார்.


