“அமெரிக்க வீரர்கள் ஈரானிய தரையில் காலடி வைத்தவுடன் அவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்த ஈரானியப் படைகள் காத்திருக்கின்றன” என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப்,தெரிவித்துள்ளார்.
“எதிரி பகிரங்கமாக பேச்சுவார்த்தைக்கான சைகை காட்டுகிறான், ஆனால் இரகசியமாக தரைவழித் தாக்குதலுக்குத் திட்டமிடுகிறான்” என்று அவர் கூறியுள்ளார்.
ஈரானியப் படைகள் காத்திருக்கின்றன
“அமெரிக்க வீரர்கள் தரைவழியாக நுழைந்ததும் அவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்த ஈரானியப் படைகள் காத்திருக்கின்றன” என்றும் காலிபாஃப் குறிப்பிட்டார்.
ஈரான் சரணடைவது குறித்து, ஈரானின் செய்தி “தெளிவானது” என்றும், அது “அவமானத்தை” ஏற்றுக்கொள்ளாது என்றும் காலிபாஃப் அரபு மொழியில் தெரிவித்துள்ளார்.
யார் இந்த காலிபாஃப்
ஈரானிய சபாநாயகர் காலிபாஃப், இராணுவப் பின்னணியைக் கொண்ட ஒரு பழமைவாத ஈரானிய அரசியல்வாதி ஆவார். இவர் மே 2020 முதல் ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகராக இருந்து வருகிறார்.

1961-ல் பிறந்த இவர், 1980-ல் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையில் (IRGC) சேர்ந்தார். ஈரான்-ஈராக் போரின்போது அதன் தளபதிகளில் ஒருவரானார்.
காலிபாஃப் நான்கு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை – 2005-ல் நான்காவது இடத்தையும், 2013-ல் இரண்டாவது இடத்தையும் பிடித்தார். 2017 தேர்தலுக்கு முன்பு போட்டியிலிருந்து விலகினார், மேலும் 2024-ல் நடந்த முன்கூட்டிய தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
தெஹ்ரானின் மேயராக இருந்த காலத்தில், ஊழல் முறைகேடு
அவர் ஒரு தொழில்முறை விமானி. மேலும், 1997 முதல் 2000 வரை ஐ.ஆர்.ஜி.சி விமானப்படையின் தளபதியாகவும், 2000 முதல் 2005 வரை ஈரானின் காவல்துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.

தெஹ்ரானின் மேயராக இருந்த காலத்தில், ஊழல் முறைகேடுகளை மறைப்பதற்காக தனது ஐ.ஆர்.ஜி.சி பதவியை காலிபாஃப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம், காலிபாஃபை ஒரு சாத்தியமான கூட்டாளியாகவும், ஒருவேளை எதிர்காலத் தலைவராகவும் கூட கருதியதாக சில உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

