மரியாதைக்குரிய உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களை வென்ற நீதிபதி பிராங்க் காப்ரியோ காலமானார்.
நீண்ட நாட்களாக புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று (20) காலமாகியுள்ளார்.
தனித்துவமான நீதி
அமெரிக்காவின் ரோட் தீவு மாநிலத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய அவர், விசாரணைகளில் அன்பு மற்றும் கருணை குணங்களுக்காக உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றார்.

நீதிபதி பிராங்க் காப்ரியோ தனது மனிதாபிமான தீர்ப்புகளுக்காகவும் தனக்கென தனித்துவமான நீதி நடைமுறையை அறிமுகப்படுத்தியதற்காகவும் அனைவராலும் மிகவும் விரும்பப்பட்டார்.
இறக்கும்போது பிராங்க் காப்ரியோவுக்கு வயது 88.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்

