இந்த ஆண்டின் ஏப்ரல் மாத இறுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 2.9 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி இறுதியில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் சூழலைத் தொடர்ந்து, வெளிநாட்டுத் துறையில் ஏற்பட்ட அழுத்தங்கள் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ கையிருப்பு
2026 மார்ச் மாத இறுதியில், சீனாவின் மக்கள் வங்கியுடனான பரிமாற்ற வசதி உட்பட, இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 7.0 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.

சந்தையில் இருந்து வெளிநாட்டு நாணயங்களை கொள்வனவு செய்த போதிலும், அந்த மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு கடன் சேவை கொடுப்பனவுகள் காரணமாக மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

