அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முதலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் திடீரென விலகினார். மேலும், துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸை முன்மொழிவதாகவும் தெரிவித்தார்.
எனினும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்த சூழ்நிலையில் கமலா ஹாரிஸுக்கு முன்னாள் அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிட்சல் ஆகியோரும் ஆதரவு அளித்தனர்.
இதையும் படிக்க:
ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான சிறந்த வழி – அமெரிக்க அதிபர் ஜோபைடன் உருக்கம்!
இதையடுத்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமலா ஹாரிஸ், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாக்கையும் பெற கடுமையாக உழைப்பேன் என்றும், நவம்பர் மாதம் மக்களின் சக்தி வெளிப்படும் எனவும் பதிவிட்டுள்ளார்.
Today, I signed the forms officially declaring my candidacy for President of the United States.
I will work hard to earn every vote.
And in November, our people-powered campaign will win. pic.twitter.com/nIZLnt9oN7
— Kamala Harris (@KamalaHarris) July 27, 2024
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வெளியான கருத்துக்கணிப்பின்படி, 49% பேர் ட்ரம்பிற்கு ஆதரவாகவும், 47% பேர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிபர் தேர்தலுக்கான போட்டி மிகவும் சவாலானதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)