பிரான்ஸ் சுற்றுப்பயணம் முடிந்து அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு வாழ் இந்தியர்கள் கடுங்குளிரிலும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் தேசிய உளவுப்பிரிவு இயக்குநராகப் பதவி ஏற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கபார்டை சந்தித்து வாழ்த்து கூறிய பிரதமர் மோடி, இருநாட்டு நல்லுறவு குறித்து பல்வேறு விஷயங்களை விவாதித்தார்.
இந்நிலையில், இந்திய நேரப்படி நாளை அதிகாலை 2.35 மணி அளவில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். அப்போது, அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கொள்கை மற்றும் சட்டவிரோத குடியேற்றம் குறித்து இருநாட்டு உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
மேலும், வரி விதிப்புகளைக் குறைக்கும் வகையில், இருநாட்டு வர்த்தகம் குறித்த புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடு, ஆற்றல், பாதுகாப்பு, தொழில்நுட்பம், அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்டவை தொடர்பாகவும் இருநாட்டுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியப் பாதுகாப்பு, ரஷ்யா-உக்ரைன் யுத்தம், மேற்கு ஆசிய நிலவரம் ஆகியவை குறித்தும் இருநாட்டுத் தலைவர்கள் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : முடிவுக்கு வருகிறதா ரஷ்யா – உக்ரைன் போர்? – டிரம்ப் காரணமாக நிகழ்ந்த மாற்றம்!
இந்நிலையில், நாளை அதிகாலை 3.40 மணிக்கு பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட்டாக செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர். அதனைத் தொடர்ந்து, எலான் மஸ்க்-யை சந்திக்க உள்ள பிரதமர் மோடி, இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை விரிவுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
February 13, 2025 12:52 PM IST
அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி… சட்டவிரோத குடியேற்றம்; வரி விதிப்பு குறித்து முக்கிய ஆலோசனை?

