[ad_1]
அதன்பின், வரி பிரச்னை வர, அமெரிக்காவில் வாழும் வலது, இடதுசாரி இந்தியர்கள் ட்ரம்ப் மேல் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
நோபல் பரிசுக்காக இந்தியா மேல் கடுமை காட்டுவதாக கருதுகிறார்கள். நோபல் கமிட்டி இடதுசார்பு கொண்டது என்பதால் ட்ரம்ப், மூன்றாம் உலகபோரை நிறுத்தினாலும், அவருக்கு அந்தப் பரிசு கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. இதற்காக தேவை இல்லாமல், இந்தியாவை பகைத்துக்கொண்டு, சீனா, ரஷ்யாவுடன் சேர்த்துவிட்டார் என கருதுகிறார்கள்.

மளிகை கடைகளில் வரிசையில் இந்தியர்கள்
தவிர, இந்த பொருளாதாரத் தடையால், இந்திய மளிகை கடைகளில் அரிசி, பருப்பு போன்ற இந்திய மளிகைப் பொருள்களின் விலை ஏறும் என்ற அச்சமும் உள்ளது. இந்தியர்கள் பலரும் வரிசையில் நின்று பாஸ்மதி அரிசி உள்ளிட்டவற்றை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.
இன்னும் விலை அந்த அளவிற்கு கூடவில்லை தான். ஆனால், இனிமேல் எகிறும் என்ற அச்சம் உள்ளது.
பொதுவாக, இந்த விஷயத்தில் அனைத்து தரப்பு இந்தியர்கள் மனநிலையும் ட்ரம்புக்கு எதிராகவே உள்ளது. ஆனால், பெரிதாக எந்த போராட்டமும், எதிர்ப்பு குரலும் எழவில்லை.
வழக்கமாக, ட்ரம்பை எதிர்ப்பவர்கள் தான் இதற்கும் எதிர்க்கிறார்கள். இந்தியர்கள் பொதுவாக தெருவில் இறங்கி போராடுபவர்கள் அல்ல.