Last Updated:
ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய இந்தியா மறுத்தது என முகமது இஷாக் தர் கூறினார்; டிரம்ப் கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய இந்தியா விரும்பவில்லை என பாகிஸ்தான் துணை பிரதமர் முகமது இஷாக் தர் விளக்கம் அளித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலை அடுத்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையை அடுத்து தாக்குதல் நிறுத்தப்பட்டது. இருப்பினும், இந்தியா – பாகிஸ்தான் மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துவருகிறது.
இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் தர், மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததாகவும், ஆனால் இரு நாடுகளின் பிரச்சினைகளுக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதை இந்தியா திட்டவட்டமாக மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தலையீட்டை பாகிஸ்தான் எதிர்க்கவில்லை என்றாலும், பிரச்சினைகளை இரு தரப்பு அடிப்படையிலேயே கையாள வேண்டும் என இந்தியா உறுதியாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதம், வர்த்தகம், பொருளாதாரம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் இஷாக் தர் கூறினார்.
இந்தியா – பாகிஸ்தான் மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவதை இந்தியா மறுத்து வரும் நிலையில், பாகிஸ்தான் துணை பிரதமரின் கருத்து அதனை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது.
September 17, 2025 5:14 PM IST
“அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய இந்தியா விரும்பவில்லை..” பாகிஸ்தான் துணை பிரதமர் விளக்கம்!


