அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் குறிப்பிட்ட 50 நாடுகளின் பிரஜைகளுக்கு 15,000 அமெரிக்க டொலர்கள் வரை விசா பிணைத் தொகை (Visa Bond) செலுத்தும் புதிய நடைமுறையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இருப்பினும், நேற்று (18-03-2026) அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னோடித் திட்டம்
அமெரிக்காவில் தங்கியிருக்கும் காலாவதி காலத்தை மீறித் தங்குபவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தூதரக அதிகாரிகளின் தீர்மானத்திற்கு அமைய 5,000, 10,000 அல்லது 15,000 அமெரிக்க டொலர்கள் பிணைத் தொகையாகச் செலுத்தப்பட வேண்டும்.
வணிகம் அல்லது சுற்றுலாவுக்காக (B1/B2 Visa) செல்லும் பங்களாதேஷ், நேபாளம் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட 50 நாடுகளின் பிரஜைகளுக்கே இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வானூர்தி நிலையங்கள்
இந்தப் பிணைத் தொகையைச் செலுத்தி அமெரிக்கா செல்பவர்கள், அங்கீகரிக்கப்பட்ட வானூர்தி நிலையங்கள் ஊடாக மட்டுமே பயணிக்க முடியும் என்பதுடன் தரைவழி அல்லது கடல்வழிப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
[NJC6WS
]
பிணைத் தொகையை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ Pay.gov தளம் ஊடாக மட்டுமே செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேறுபவர்களுக்கு இந்தப் பணம் மீண்டும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

