விமானங்கள் சுடப்பட்ட தருணத்தில், விமானிகள் பாராசூட் மூலம் குதிக்கும் காட்சிகளும், தரையிறங்கிய விமானிகளை குவைத் அதிகாரிகளும் உள்ளூர் மக்களும் மீட்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மீட்கப்பட்ட ஆறு விமானிகளும் தற்போது சீரான உடல் நிலையில் இருப்பதாக அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரைத் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த இக்கட்டான சூழலில், நட்பு நாடான குவைத்தின் தாக்குதலுக்குள்ளானது அமெரிக்க ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
