நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை.
அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் இஸ்லாமாபாத்திற்குக் கிளம்பத் தயாராக இருந்திருக்கின்றனர்.
ஆனால், ‘அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தை நடத்துவதை நாங்கள் ஏற்கமாட்டோம்’ என்று ஈரான் தரப்பு தெளிவாக இருந்தது.

அதனால், ஈரான் இஸ்லாமாபாத்திற்கு வர ரெடியாக இல்லை.
இதனால், நேற்று நடக்கவிருந்த பேச்சுவார்த்தை நடக்கவில்லை. ஆனால், தேதி தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.

