Last Updated:
ஓமனில் நடந்த ஈரான் – அமெரிக்கா இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தை சுமூக நிலையை எட்டியதாகவும், விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரகச்சி தெரிவித்தார்.
ஈரான் மீது புதிதாக பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
அணு ஆயுதத் தடைச் சட்ட விவகாரத்தில் ஈரான் மீது டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் ஓமனில் ஈரான் – அமெரிக்கா இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தை நடந்தன. பேச்சுவார்த்தை முடிந்த சில மணி நேரங்களில் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. அந்த வகையில், இந்திய நிறுவனம் உள்பட 15 நிறுவனங்கள், 14 கப்பல்கள் மீது புதிய பொருளாதார தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஈரானின் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை ரகசியமாக மற்ற நாடுகளுக்கு இந்த நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் கடத்தியதாக கூறி அமெரிக்கா இந்த தடையை அறிவித்துள்ளது. இதில் மகாராஷ்டிராவை சேர்ந்த Elevate Marine Management என்ற தனியார் நிறுவனம் மீது பொருளாதார தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், ஓமனில் நடந்த ஈரான் – அமெரிக்கா இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தை சுமூக நிலையை எட்டியதாகவும், விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரகச்சி தெரிவித்த சிறிது நேரத்தில் அமெரிக்காவின் பொருளாதார தடை குறித்த அறிவிப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

