சர்வதேச அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதாகக் கூறி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு பரிந்துரைக்க ஐ.நா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei) இதனை தெரிவித்துள்ளார்.
IAEA ஆளுநர் சபையினால் நிறைவேற்றப்பட்ட இந்த ஈரான் எதிர்ப்புத் தீர்மானம் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சீர்குலைக்கும் நடவடிக்கைகள்
இந்தநிலையில், IAEA ஆளுநர் சபையின் தீர்மானம் குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், இந்தத் தீர்மானம் சட்டவிரோதமானது, தொழில்நுட்ப ரீதியாக ஆதாரமற்றது, முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானத்தில் அமெரிக்கா மற்றும் சீயோனிச அமைப்பின் (இஸ்ரேல்) நேரடி அழுத்தமும் தடம் பதிந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
IAEA அமைப்பின் இத்தகைய அரசியல்மயமாக்கப்பட்ட மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள், உலக நாடுகளை அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து (NPT) விலகும் நிலைக்குத் தள்ளும் என்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

