76.0 பாதுகாப்பு மதிப்பெண்ணுடன் உலகளவில் 15-வது இடத்தை சீனா பிடித்துள்ளதன் மூலம், தன்னுடைய பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகளைவிட மிகவும் முன்னணியில் உள்ளது. உலகெங்கிலும் இருந்து பயனர் சமர்ப்பித்த தரவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்தக் குறியீடு, குற்ற விகிதங்கள், பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் கருத்து மற்றும் சட்ட அமலாக்கத்தின் மீதான நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளையும் மதிப்பிடுகிறது.
இந்தப் பட்டியலில் மிகவும் கீழே இருந்தாலும், குறிப்பிடத்தக்க செயல்திறனை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. ஆம், 147 நாடுகளில் 55.7 மதிப்பெண்களுடன் 66வது இடத்தைப் பிடித்ததோடு மட்டுமல்லாமல், இங்கிலாந்து (87-வது, 51.7 புள்ளிகள்) மற்றும் அமெரிக்கா (89-வது, 50.8 புள்ளிகள்) ஆகிய நாடுகளை முந்தியுள்ளது. பொதுவாக இந்த இரண்டு நாடுகளுமே பாதுகாப்புமிக்க, வளர்ந்த ஜனநாயக நாடுகளாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தெற்காசிய அண்டை நாடுகளில், இலங்கை 59-வது இடத்தைப் பிடித்துள்ளது (இதன் மதிப்பெண்: 57.9). பாகிஸ்தான் 65-வது இடத்தையும் (மதிப்பெண்: 56.3) மற்றும் வங்கதேசம் 126-வது இடத்தையும் பிடித்துள்ளது (மதிப்பெண்: 38.4).
இந்த ஆண்டு உலகளாவிய தரவரிசையின் முதலிடத்தில் சிறிய ஐரோப்பிய நாடான அன்டோரா, 84.7 என்ற பாதுகாப்பு மதிப்பெண்ணுடன் “2025ஆம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான நாடு” என்று முடிசூட்டப்பட்டுள்ளது. பிரான்சுக்கும், ஸ்பெயினுக்கும் இடையிலான பைரனீஸ் மலைகளில் மறைந்திருக்கும் அன்டோரா, அதன் குறைந்த குற்ற விகிதங்கள் மற்றும் வலுவான பொது பாதுகாப்பு உணர்வுக்காக அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
மேலும், மூன்று மத்திய கிழக்கு நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் ஓமன் ஆகியவையும் வலுவான இடத்தைப் பெற்றுள்ளன. இவை அனைத்தும் உலகளவில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன. அதற்கு முக்கிய காரணம், நன்கு வளர்ச்சியடைந்த பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் மற்றும் குறைந்த அளவிலான குற்றங்கள்.
அன்டோரா – 84.7
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) – 84.5
கத்தார் – 84.2
தைவான் – 82.9
ஓமன் – 81.7
ஐல் ஆஃப் மேன் (பிரிட்டிஷ் கிரீடத்தைச் சார்ந்தது) – 79.0
ஹாங்காங் (சீனா) – 78.5
ஆர்மீனியா – 77.9
சிங்கப்பூர் – 77.4
ஜப்பான் – 77.1
July 27, 2025 12:45 PM IST
அமெரிக்கா & இங்கிலாந்தைவிட பாதுகாப்பான நாடு எது தெரியுமா…? 2025 உலக பாதுகாப்பு குறியீட்டில் தகவல்…!