Last Updated:
நியூயார்க் நகரில் டொனால்டு டிரம்ப் வருவதால் மேக்ரான் காரை போலீசார் நிறுத்தினர்.
அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் பயணத்துக்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரானை நடுரோட்டில் அந்நாட்டு காவல் துறையினர் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் உரையாற்றிய பின் ஓய்வு எடுப்பதற்காக பிரான்ஸ் தூதரகத்துக்கு மேக்ரான் சென்று கொண்டிருந்தார். அப்போது, டொனால்டு டிரம்ப் வருவதால், அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது அந்த வழியில் வந்த மேக்ரானின் காரும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சிறிது நேர காத்திருப்புக்கு பிறகு காரில் இருந்து இறங்கி வந்த மேக்ரான், நேராக போலீஸ் அதிகாரிடம் சென்று “ஏன் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளீர்கள்?” என கேள்வி எழுப்பினார். அப்போது, அதிபர் டிரம்பிற்காக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது என போலீசார் அவரிடம் விவரித்தனர்.
இதையடுத்து, உடனே அங்கிருந்தவாறே, டொனால்டு டிரம்பிற்கு மேக்ரான் போன் செய்து, உங்களால் நடுரோட்டில் நிற்பதாகவும், உடனடியாக போக்குவரத்தை சரி செய்யுங்கள் என்றும் கிண்டலாக கூறினார். எதிர்முனையில் இருந்து டிரம்ப் என்ன சொன்னார் என்று தெரியாத நிலையில், போனில் பேசியவாறே நடந்தே பிரான்ஸ் தூதரகத்துக்கு மேக்ரான் சென்றடைந்தார்.
September 24, 2025 9:48 AM IST
அமெரிக்காவில் நடுரோட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட பிரான்ஸ் அதிபர்.. அடுத்து என்ன நடந்தது தெரியுமா?


