கபே லேம் கைது
உலகளவில் சமூக ஊடகத்தின் மூலம் வைரலான கபே லேம் ஜூன் 6ஆம் தேதி அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவால் (ICE) கைது செய்யப்பட்டார்.
இந்தச் செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தக் கைது குறித்து அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு விளக்கமளித்திருக்கிறது.
இது தொடர்பாக அது வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு ஜூன் 6-ம் தேதி நெவாடாவின் லாஸ் வேகாஸில் உள்ள ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தில் கபே லேம் (25) என்பவரைக் குடியேற்ற மீறல்களுக்காகக் கைது செய்தது.
ஏப்ரல் 30-ம் தேதி அமெரிக்காவிற்குள் நுழைந்த அவர், தனது விசாவின் விதிமுறைகளை மீறி அதிக நாள்கள் தங்கியிருந்தார்.
ஜூன் 6-ம் தேதி கபே லேமு கைது செய்யப்பட்டார். அன்றே தன்னார்வ வெளியேற்றம் வழங்கப்பட்டது. அதற்குப்பிறகு அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறிவிட்டார்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

