இந்த எல்லையில் உஜ், பசந்தா், தாவி, செனாப் போன்ற ஆறுகள் பாய்வதால், பாதுகாப்புப் பணி மிகவும் சவாலானதாகும். சா்வதேச எல்லையில் இருந்து ஜம்மு-பதான்கோட் சாலையை அணுகும் அனைத்து பாதைகளும் சீலிடப்பட்டு, பலஅடுக்கு (பிஎஸ்எஃப், ராணுவம், எல்லை போலீஸ், கிராமப்புற தற்காப்புப் படை, உள்ளூா் காவல் துறை) பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2.7 லட்சம் வீரா்களைக் கொண்ட பிஎஸ்எஃப், உலகிலேயே மிகப் பெரிய எல்லைக் காவல் படை என்ற சிறப்புடையதாகும்.

