Last Updated:
டென்மார்க் முதல் மலேசியா வரை பல நாடுகளும் அமெரிக்காவின் சில மாகாணங்களும் இந்த நடைமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் டிக்டாக், யூடியூப், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட 10 சமூக வலைதளங்களை 16 வயதுக்குட்பட்டோர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கிக், ரெடிட், ஸ்நாப்சாட், த்ரெட், டிக்டாக், ட்விட்ச், யூடியூப், எக்ஸ் ஆகிய 10 சமூக வலைதளங்களை 16 வயதுக்குட்பட்ட சிறார் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமூகவலைதளங்கள் எவ்வளவு நேரம் தனிநபரால் பயன்படுத்தப்படுகின்றன, முக மற்றும் குரல் பகுப்பாய்வு, பள்ளி நேரங்களுடன் ஒத்துப்போகும் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தடையை அமல்படுத்த சமூகவலைதள நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா அரசு உத்தரவிட்டுள்ளது.
இதை மீறி 16 வயதுக்குட்பட்ட பயனர்களை அனுமதிக்கும் நிறுவனங்களுக்கு சுமார் 300 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
இது போன்று சமூகவலைதளங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ள முதல் நாடு ஆஸ்திரேலியா ஆகும். புதிய சமூக ஊடகங்கள் வரவர, தடையும் விரிவுபடுத்தப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீஸ், கைப்பேசியைக் கைவிட்டுப் பள்ளி விடுமுறையை நல்ல முறையில் பயன்படுத்துங்கள் என்றார்.
December 10, 2025 8:05 PM IST
யூடியூப், இன்ஸ்டா உள்ளிட்டவைகளை பயன்படுத்த 16 வயதுக்குட்பட்டோருக்கு தடை… ஆஸ்திரேலியாவில் அதிரடி


