Last Updated:
“அமலாக்கத்துறையைத் தோற்கடித்து தேர்தலில் பாஜகவை வென்றுள்ளார். அவர் மீண்டும் பாஜகவை தோற்கடிப்பார் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.” என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவரும், எம்.பியுமான அகிலேஷ் யாதவ், தனது மனைவியும், எம்.பியுமான டிம்பிள் யாதவுடன் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவுக்குச் சென்றிருந்தனர்.
இந்நிலையில், மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, வெளியேவந்த அகிலேஷ் யாதவ் அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது; “மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இதில் அரசியல் ஏதும் பேசப்படவில்லை. பாஜக மூலம் ஏவிவிடப்பட்ட அமலாக்கத்துறையை மம்தா பானர்ஜி கையாண்ட விதம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அமலாக்கத்துறையைத் தோற்கடித்து தேர்தலில் பாஜகவை வென்றுள்ளார். அவர் மீண்டும் பாஜகவை தோற்கடிப்பார் என்பதில் உறுதியாக இருக்கிறேன். மம்தா பானர்ஜி, அன்பு, சகோதரத்துவ அரசியலை முன்வைக்கிறார். ஆனால், பாஜக பிளவுப்படுத்தும், பிரிவினைவாத அரசியலை மட்டுமே பேசுகிறது.


