Last Updated:
சஞ்சு சாம்சன் 16 ரன்களில் வெளியேற அடுத்து வந்த திலக் வர்மாவுடன் இணைந்து அபிஷேக் சர்மா சிக்சரும் பவுண்டரியுமாக விளாசினார். இந்த இணை 2 ஆவது விக்கெட்டிற்கு 115 ரன்கள் சேர்த்தது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்துள்ளது. அபிஷேக் சர்மா 13 சிக்சர் 7 பவுண்டரியுடன் 54 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்.
ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள 4 போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் 5 ஆவது டி20 கிரிக்கெட் தொடர் மும்பை வான்கிடே மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர்.
சஞ்சு சாம்சன் 16 ரன்களில் வெளியேற அடுத்து வந்த திலக் வர்மாவுடன் இணைந்து அபிஷேக் சர்மா சிக்சரும் பவுண்டரியுமாக விளாசினார். இந்த இணை 2 ஆவது விக்கெட்டிற்கு 115 ரன்கள் சேர்த்தது. திலக் வர்மா 24 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 2 ரன்னில் வெளியேறினார்.
தொடர்ந்து அதிரடியாக ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். சிவம் துபே 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, 13 சிக்சர் 7 பவுண்டரியுடன் 54 பந்துகளில் 135 ரன்கள் குவித்து அபிஷேக் சர்மா வெளியேறினார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 247 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
February 02, 2025 8:52 PM IST


