சென்னை ஐஐடியில் 12 ரூபாய் 50 காசுக்கு எம்.டெக் படித்த முன்னாள் மாணவர், இன்று, 228 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.
சென்னை ஐஐடியில் 1970 ஆம் ஆண்டு ஏரோனாடிக்ஸ் பாடப்பிரிவில் கிருஷ்ணா சிவுகுலா என்பவர் எம்.டெக் படித்தவர். இவர் இதற்கு கட்டணமாக 12 ரூபாய் 50 காசு கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து படிப்பு முடிந்து பல்வேறு நாடுகளில் செயல்படும் இந்தோ-எம்ஐஎம் என்ற நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அலுவலருமாக பணியாற்றினார். இவர், 1997-ஆம் ஆண்டு ‘மெட்டல் இன்ஜெக்சன் மோல்டிங்’ எனப்படும் அதிநவீன பொறியியல் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்தார்.
அமெரிக்காவில் அப்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பமாக இது பார்க்கப்பட்டது. இரு தொழிற்சாலைகளை நடத்தி வரும் கிருஷ்ணா சிவகுலா, ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறார்.
இதையும் படிக்க:
தெற்காசியாவின் பணக்கார கிராமம்: பல்வேறு வங்கிகளில் ரூ.5,200 கோடி டெபாசிட்
இந்நிலையில், தான் படித்த கல்வி நிறுவனத்திற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக, கிருஷ்ணா சிவுகுலா, சென்னை ஐஐடிக்கு 228 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். 54 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ஐஐடிக்கு கிடைத்த அதிக நன்கொடை இதுவாகும்.
அகில இந்திய அளவில் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய அளவிலான இந்த நன்கொடை மூலம், சென்னை ஐஐடி மேம்பாட்டுப் பணிகள் மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கிருஷ்ணா சிவுகுலாவை கவுரவிக்கும் விதமாக கல்வி நிறுவனத்தின் தொகுப்பு ஒன்றுக்கு ‘கிருஷ்ணா சிவுகுலா பிளாக்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, முன்னாள் மாணவர் ஒருவர், தாம் படித்த கல்வி நிறுவனத்தை நினைவில் வைத்து செயலாற்றுவதை நினைத்து பெருமை கொள்வதாகக் கூறினார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)