• Login
Sunday, October 19, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அன்று ஆபிஸ் பாய்; இன்று மிகப்பெரிய நிறுவனத்தின் உரிமையாளர்… யார் தெரியுமா…? | வணிகம்

GenevaTimes by GenevaTimes
October 19, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
அன்று ஆபிஸ் பாய்; இன்று மிகப்பெரிய நிறுவனத்தின் உரிமையாளர்… யார் தெரியுமா…? | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 18, 2025 2:57 PM IST

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவர் தாதாசாஹேப். இது அடிக்கடி வறட்சி நிகழும் பகுதியாகும்.

Rapid Read
News18News18
News18

அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, பெரிய கனவுகள்: இவை அனைத்துமே ஒரு எழுச்சியூட்டும் கதைக்குத் தேவையானவை. இதுபோல் பல வெற்றியாளர்களின் கதையை நாம் பார்த்துள்ளோம். அவர்களில் ஒருவர்தான் தாதாசாகேப் பகத். இது வெறும் ஊக்கமளிக்கும் கதையல்ல; அதையும்விட மேலானது. அவரது தொலைநோக்குப் பார்வை, ஒருபோதும் விட்டுக் கொடுக்காத மனப்பான்மை மற்றும் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் ஆகியவையே பகத்தின் ஆளுமையை வடிவமைத்துள்ளது.

யார் இந்த தாதாசாகேப் பகத்?

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவர் தாதாசாஹேப். இது அடிக்கடி வறட்சி நிகழும் பகுதியாகும். இதனால் விவசாயம் செய்வது கடினமான தொழிலாக மாறிப் போனது. தாதாசாஹேப் குடும்பம் ஒருபோதும் கல்விக்கு அவ்வளவு முன்னுரிமை அளித்ததில்லை என்பதால், அவர் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பின்னர், ஐடிஐ படிப்பைத் தேர்ந்தெடுத்தார், இது பொதுவாக உடல் உழைப்பைக் கோரும் தொழிற்சாலை வேலைகளுக்கு மக்களைத் தயார்படுத்தும் படிப்பாகும்.

ஐடிஐ முடித்தவுடன் புனேவுக்கு வேலை தேடிச் சென்று, அங்கு ஒரு பணியில் அமர்ந்தார். முதல் வேலையில் அவருக்குக் கிடைத்த சம்பளம் வெறும் ரூ.4,000 மட்டுமே. இவ்வளவு குறைவான சம்பளத்தில் வாழ்க்கை நடத்த முடியாது என்பதை அவர் விரைவில் உணர்ந்தார். பின்னர் பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸில் ஆஃபிஸ் பாயாக சேர்ந்தார். இதில் அவருக்கும் மாதம் ரூ.9,000 சம்பளம் கிடைத்தது. முன்பு வாங்கிய சம்பளத்தைவிட ரூ.5,000 அதிகமாகக் கிடைத்ததால் மிகவும் சந்தோஷப்பட்டார். எனவே, எந்த யோசனையும் இல்லாமல் விரைவாக அந்த வேலையைப் பற்றிக்கொண்டார்.

இந்தப் பணி உடல்ரீதியானதாகவும், கடினமான வேலைகள் நிறைந்ததாகவும் இருந்தாலும், சம்பளம் என்னவோ குறைவாகவே இருந்தது. அந்நிறுவனத்தில் கணினிகளில் அறிவுப்பூர்வமான வேலைகளைச் செய்வது பல வாய்ப்புகளையும், சிறந்த வருமானத்தையும் பெற்றுத் தரும் என்பதை அவர் உணரத் தொடங்கினார். கணினி சார்ந்த வேலையில் எப்படி சேர்வது என மற்ற ஊழியர்களிடம் கேட்டபோது, உன்னிடம் குறைந்த கல்வித் தரம் இருப்பதால் நல்ல வேலை கிடைக்காது என்று கூறினர். அதேசமயம் கிராஃபிக்ஸ் வடிவமைப்பு மற்றும் அனிமேஷனை கற்றுக்கொள்ளுமாறு பரிந்துரைத்தனர். ஏனென்றால், இதில் பட்டப்படிப்புகளைவிட திறன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் படைப்புத் துறையைத் தொடர உறுதி பூண்டார்.

இதையும் படிங்க: வாடகை வீடா…? சொந்த வீடா…? உங்களுடைய விருப்பம் மற்றும் தேர்வு என்னவாக இருக்கும்…?

இரவில் ஆஃபிஸ் பாயாக பணியாற்றியபடியே, பகலில் வடிவமைப்புக் கலையைக் கற்றுக்கொண்டார். அவரது கடின உழைப்பு பலனளித்தது. ஒரு வருடத்திற்குள், தேர்ந்த தொழில்முறை வடிவமைப்பாளராக ஆனார். தனது பயணத்திற்கு எதுவும் இடைஞ்சலாக வரக்கூடாது என நினைத்து சொந்தமாக நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால் அவர் நினைத்தது போல் தொழில்முனைவோர் பாதை அவ்வளவு எளிதாக அமையவில்லை. இதனால் மீண்டும் தனது கிராமத்திற்குத் திரும்பினார்.

இதையும் படிங்க: இந்தியாவின் மிகவும் பிரபலமான ஆயுர்வேத பிராண்டுகளில் ஒன்றின் வெற்றிக் கதை… எந்த நிறுவனம் தெரியுமா…?

அங்கு கிராமத்தின் எளிமையான வாழ்க்கை முறையில் உள்ள வாய்ப்புகளைக் கண்டுபிடித்து, அதற்கேற்ற தயாரிப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார். தனது பணியிடத்தை மலை உச்சியில் அமைத்துக்கொண்டு, தனது நிறுவனத்திற்கு ‘டிசைன் டெம்ப்ளேட்’ என்று பெயரிட்டார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது நிறுவனம் வெற்றிபெறத் தொடங்கியது. இன்று புகழ்பெற்ற கேன்வாவைப் போல் தாதாசாகேப் பகத் தொடங்கிய நிறுவனமும் டெம்ப்ளேட்களை வடிவமைப்பதன் மூலம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 18, 2025 2:57 PM IST

Read More

Previous Post

இந்திய அணி காலடி எடுத்து வைக்கும் முன்… ஆஸ்திரேலியா செய்த சம்பவம்!

Next Post

ரஷ்யா கச்சா எண்ணெய் விவகாரம்.. ட்ரம்ப் பேச்சுக்கு இந்தியா விளக்கம்

Next Post
ரஷ்யா கச்சா எண்ணெய் விவகாரம்.. ட்ரம்ப் பேச்சுக்கு இந்தியா விளக்கம்

ரஷ்யா கச்சா எண்ணெய் விவகாரம்.. ட்ரம்ப் பேச்சுக்கு இந்தியா விளக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin