• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அனுமன் ஜெயந்தி தடைகள் விலகி, வெற்றிகள் குவியும்

GenevaTimes by GenevaTimes
December 28, 2024
in மலேசியா
Reading Time: 1 min read
0
அனுமன் ஜெயந்தி தடைகள் விலகி, வெற்றிகள் குவியும்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பொதுவாக அனுமன் ஜெயந்தி அன்று அவரின் அருள் வேண்டி, அனுமன் வழிபாடு செய்வது தான் பெரும்பாலானவர்களின் வழக்கம். ஆனால் சில அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருந்து, ராம நாமம், அனுமனின் மந்திரங்கள் சொல்லி அனுமனின் அருளை பெறுவதற்கு வேண்டிக் கொள்வது உண்டு.

மார்கழி மாதத்தில் வரும் மிக முக்கியமான வழிபாட்டு மற்றும் விரத நாட்களில் ஒன்று அனுமன் ஜெயந்தி ஆகும். அனுமனின் அவதார தினத்தில் விரதம் இருந்து, அவரை வழிபடுவதால் அனுமனின் அருள் கிடைக்கும். தடைகள் விலகி வெற்றிகள் கிடைக்கும், மன அமைதி, செல்வ வளம், வளர்ச்சி, பாதுகாப்பு ஆகிய அனைத்தும் கிடைக்கும். இந்த நாளில் குறிப்பிட்ட வழிபாடுகளை செய்வதால் அனுமனின் அருளை எளிதாக பெற முடியும். அனுமனை மற்ற நாட்களில் வழிபடுவதை விட மார்கழி மாதத்தில் வரும் அனுமன் ஜெயந்தி அன்று வழிபடுவது மிக அதிகமான பலன்களை தரும்.

அனுமன், மார்கழி மாத அமாவாசை திதியும், மூல நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. இந்த ஆண்டு மார்கழி அமாவாசை, அதாவது அனுமன் ஜெயந்தி டிசம்பர் 30ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 04.44 மணி துவங்கி, டிசம்பர் 31ம் தேதி காலை 05.03 வரை அமாவாசை திதி உள்ளது. அதே போல் டிசம்பர் 30ம் தேதி அதிகாலை 12.19 மணி துவங்கி, டிசம்பர் 31ம் தேதி அதிகாலை 01.12 வரை மூலம் நட்சத்திரம் உள்ளது. இந்த நாளில் முன்னோர் வழிபாட்டுடன் அனுமனையும் விரதம் இருந்து வழிபட்டால் அளவில்லாத நன்மைகளை பெற முடியும்.

அனுமன் ஜெயந்தி அன்று முதன் முதலில் அனுமனை வேண்டி விரதம் இருந்தவர் பாண்டவர்களின் பத்தினியான திரெளபதி தான். புராண கதைகளின் படி, எவர் ஒருவர் அனுமன் விரதம் இருக்கிறார்களோ அவர்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியும், அமைதியும், செல்வ வளமும் நிறைந்த வாழ்க்கை கிடைக்கும் என பிரம்ம தேவர், வாயு பகவானுக்கு சத்தியம் செய்து வரம் அளித்ததாக சொல்லப்படுகிறது. அனுமன் விரதம் இருந்து, வழிபடுபவர்களுக்கு ஆரோக்கியம், மகிழ்ச்சி கிடைப்பதுடன், அவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

பாண்டவர்கள் வனவாசத்தில் மிகுந்த துன்பங்களை அனுபவித்த போது வேத வியாச மகரிஷி, தர்மனுக்கு உபதேசித்த விரதம் இதுவாகும். பகவான் கிருஷ்ணரும், திரெளபதிக்கு, அனுமன் விரதத்தின் கதைகளையும், இந்த விரதம் இருப்பதால் கிடைக்கும் சிறப்புகள், முக்கியத்துவம் குறித்தும் எடுதஅதுரைத்துள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. இந்த நாளில் விரதம் இருந்து அனுமனுக்கு வெற்றிலை மாலை, வடை மாலை, வெண்ணெய் சாற்றி வழிபடுவதால் அனுமனின் அருள் கிடைக்கும். அதோடு ராம நாமம் உச்சரிப்பதும் அளவில்லாத புண்ணிய பலன்களை தரும்.

அனுமன் விரதம் இருப்பவர்கள் 13 முடிச்சுகள் போட்ட கயிறு ஒன்றை எடுத்துக் கொண்டு, அதைக் கையில் வைத்துக் கொண்டு “ஓம் நமோ வாயுநந்தனாய ஓம்” என்ற மந்திரத்தை 9, 11, அல்லது 27 முறை சொல்லி, கையில் அல்லது கழுத்தில் அணிந்து கொண்டால் அவர்களுடன் அனுமன் எப்போதும் இருந்து காப்பார்கள். இந்த கயிறை வீட்டில் வைத்து வழிபடுவதும் நல்ல பலனை தரும். இப்படி அனுமனை வேண்டி முடிச்சுக்கள் போட்டு வேண்டிக் கொண்டால், நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் தடைகள், சிக்கல்கள் ஆகியவற்றை அவர் நீக்கிடுவார் என்று அர்த்தம். அதோடு கோதுமை தானம் அளிப்பது அனுமனின் அருளையும், பாதுகாப்பையும் தரும். இதை செய்வதால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

The post அனுமன் ஜெயந்தி தடைகள் விலகி, வெற்றிகள் குவியும் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

காலநிலை மாற்றத்தால் 2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவு: ஆய்வறிக்கை | Climate change led to 41 additional days of extreme heat in 2024: new report

Next Post

உலகில் மிகவும் அரிதான மாணிக்கக் கல் இலங்கையில்…

Next Post
உலகில் மிகவும் அரிதான மாணிக்கக் கல் இலங்கையில்…

உலகில் மிகவும் அரிதான மாணிக்கக் கல் இலங்கையில்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin