இதற்கிடையில், நேற்று மாலை ஈரான் மீண்டும் பல ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. இதில் மூன்று ஏவுகணைகள் பாதிப்பை ஏற்படுத்தும் முன்னரே வான் பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாகத் தடுத்து அழிக்கப்பட்டன.
தொடர் அச்சுறுத்தல் காரணமாக, இஸ்ரேலிய அதிகாரிகள் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். மொபைல் போன்களுக்கு அனுப்பப்படும் எச்சரிக்கை செய்தியைப் பின்பற்றி, மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், மறு உத்தரவு வரும் வரை அங்கேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
