நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா, பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி உள்பட 5 பேருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பாரத ரத்னா விருதுகளை வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று(மார்ச். 30) நடைபெற்றது.
இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதுகளை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் கடந்தாண்டு காலமான நிலையில், அவரது மகள் நித்யா ராவ் விருதுதினை பெற்றுக்கொண்டார்.
மறைந்த பிகார் மாநில முன்னாள் முதல்வரும் சோஷலிச தலைவருமன கர்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அவரது மகன் ராம் நாத் தாக்குர் விருதை பெற்றுக்கொண்டார்.
வயது மூப்பின் காரணமாக நேரில் வர இயலாத பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு அவரது இல்லத்தில், இன்று (மார்ச். 31) ’பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அத்வானி இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு விருதை வழங்கி கௌரவித்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.