Last Updated:
விண்வெளி, வான்பரப்பு மற்றும் கடல் ஆகியவற்றை இணைக்கும் அதிவேக, பாதுகாப்பான இணைய சேவையை வழங்கும் வகையில் சீனா இந்த முன்னெடுப்புகளை செய்துள்ளது.
அதிவேக இணைய சேவைக்கான 18 செயற்கை கோள்களை சீனா விண்வெளிக்கு அனுப்பியது.
குவான்ஃபான் திட்டத்தின் மூலம் தாழ் புவிவட்ட செயற்கை கோள்களை சீனா விண்ணில் செலுத்தி வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதன்முறையாக இந்த திட்டத்தின் கீழ் செயற்கை கோள்களை சீனா அனுப்பியது. இந்நிலையில், ஹைனான் மாகாணத்தில் இருந்து மேலும் 18 செயற்கை கோள்களை லாங் மார்ச் 8 ராக்கெட் மூலம் சீனா அனுப்பி உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் 15,000 செயற்கை கோள்களை செலுத்த சீனா விண்வெளித்துறை திட்டமிட்டுள்ளது.

விண்வெளி, வான்பரப்பு மற்றும் கடல் ஆகியவற்றை இணைக்கும் அதிவேக, பாதுகாப்பான இணைய சேவையை வழங்கும் வகையில் இந்த செயற்கை கோள்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.


