போயிங் 737-500 விமானத்தின் பாதுகாப்புப் பகுதியில் ஒரு சாதனத்தை விட்டுச் சென்றதை ஊழியர் உணர்ந்தார்.
அவர் அதை எடுக்க திரும்பிச் சென்றபோது, இயங்கிக் கொண்டிருந்த என்ஜின் அவரை உள்ளே வேகமாக இழுத்தது.
அது பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் அந்தப் பகுதிக்குள் யாரும் நுழைய முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
அந்த போயிங் 737 எஞ்சினுக்குள் ஊழியர் இழுக்கப்பட்டதும் என்ஜின் தீப்பிடித்ததாக Bild செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பின்னர் ஊழியரின் உடல் மீட்கப்பட்டது. அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஈரான் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் எதிர்கால நிகழ்வுகளைத் தடுக்க விபத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

