மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 12.00 மணிக்கு. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை சில இடங்களில் பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 05 முதல் 15 வரை சூரியன் வடக்கு நோக்கி பயணிக்கும் போது சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே உள்ளது.
அதன்படி, இன்று (06) நண்பகல் 12:12 மணிக்கு லெல்லப்பிட்டிய, பலாங்கொடை, புலத்சிங்கள, கல்தொட்ட மற்றும் வாத்துவாயன பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும்.
இதற்கிடையில், வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களுக்கும் மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்தப் பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

