குருநாகல் வீதியில் உள்ள இந்த விற்பனை நிலையம், 790,000 ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளை 850,000 ரூபாய்க்கு (60,000 ரூபாய் கூடுதல்) விற்றமை மற்றும் விலைப் பட்டியலை காட்சிப்படுத்தாத குற்றத்துக்காக 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
குருநாகல் – ஹெட்டிபொல பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட முகவர் விலையை விட அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்த மற்றும் விலைப் பட்டியலை காட்சிப்படுத்தத் தவறிய மூன்று மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்தது.
மோட்டார் சைக்கிள்களுக்கான அதிக தேவை மற்றும் குறைந்த விநியோகம் காரணமாக, சில வர்த்தகர்கள் அவற்றை அதிக விலைக்கு மறு விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலையடுத்து, 2026 ஜூலை 27ஆம் திகதின்று ஹெட்டிபொல பகுதியில் இந்த விசேட சோதனைகள் நடத்தப்பட்டன.
சில தரப்பினர், மற்றவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்களைப் பெற்று, பின்னர் அவற்றை இறுதி நுகர்வோருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் பின்வரும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மல்ஜி ஓட்டோ சிட்டி (Maljee Auto City) – குருநாகல் வீதியில் உள்ள இந்த விற்பனை நிலையம், 790,000 ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளை 850,000 ரூபாய்க்கு (60,000 ரூபாய் கூடுதல்) விற்றமை மற்றும் விலைப் பட்டியலை காட்சிப்படுத்தாத குற்றத்துக்காக 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பிரதீப் மோட்டார்ஸ் (Pradeep Motors) – சிலாபம் வீதியில் உள்ள இந்த நிறுவனத்துக்கு, 790,000 ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளை 845,000 ரூபாய்க்கு விற்றமை மற்றும் விலைப் பட்டியலை காட்சிப்படுத்தாத குற்றத்துக்காக 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
லக்கி என்டர்பிரைசஸ் (Lucky Enterprises) – விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களின் விலைகளைக் காட்சிப்படுத்தாத குற்றத்திற்காக 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிள்களை வாங்குவதற்கு முன்னர் அவற்றின் விலைகளைச் சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. வர்த்தகர்கள் அநியாயமான முறையில் அதிக விலைகளை அறவிடுவது அல்லது விலைப் பட்டியல்களைக் காட்சிப்படுத்தத் தவறுவது குறித்து 1977 என்ற ஹாட்லைன் இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு அளிக்கலாம் எனவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

