Last Updated:
பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் அதிகாலை நடந்த சாலை விபத்தில் ஐந்தடி தூரத்தில் காயமின்றி தப்பினார். லாரி மோதி மூன்று பாதுகாவலர்கள் காயமடைந்தனர்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், இன்று அதிகாலை நடந்த பயங்கர சாலை விபத்தில் இருந்து ஐந்தடி தூரத்தில் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், பீகார் மாநிலம், மாதேபுராவில் நடைபெற்ற தனது கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தனது பாதுகாப்பு வாகனங்களோடு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், அதிகாலை 12.30 மணி அளவில் பாட்னா – முசாஃபர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த அவர், வைஷாலி மாவட்டத்தில், ஒரு இடத்தில் தேநீர் அருந்துவதற்காக தங்களது வாகனத்தை சாலையின் ஓரம் நிறுத்தியுள்ளனர். அப்போது அந்தச் சாலையில் அதிக வேகமாக வந்த லாரி ஒன்று தேஜஸ்வி யாதவ் வாகனத்தின் பின் நின்றிருந்த பாதுகாப்பு வாகனங்கள் இரண்டின் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
பாதுகாப்பு வாகனங்கள் இரண்டின் மீது மோதி நின்றதால், நல்வாய்ப்பாக தேஜஸ்வி யாதவ் எந்தக் காயமும் இன்றி தப்பினார். தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, லாரி ஓட்டுநர், உதவியாளர் கைது செய்யப்பட்டனர். மேலும், லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், விபத்தில் காயமடைந்த மூன்று பாதுகாவலர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை தேஜஸ்வி யாதவ் நேரில் சந்தித்தார். இந்த விபத்தில் வெறும் ஐந்தடி தூரத்தில் இருந்த தேஜஸ்வி யாதவ் எந்தக் காயமும் இன்றி நல்வாய்ப்பாக தப்பினார்.
June 07, 2025 8:46 PM IST


