அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் ஊழல் குற்றச்சாட்டுகள் வைத்துள்ள நிலையில், அது குறித்து அமெரிக்கா தங்களுடன் எவ்வித தொடர்பும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது இந்திய வெளியுறவுத்துறை.
டெல்லியில் செய்தியாளர்களிடம் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “நாங்கள் இதை தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் மற்றும் அமெரிக்க நீதித்துறை இடையிலான ஒரு சட்டப்பூர்வமான பொருளாக பார்க்கிறோம். இதுமாதிரி விஷயங்களுக்கான நடைமுறைகள் மற்றும் சட்ட வழிமுறைகள் பின்பற்றப்படும் என நம்புகிறோம். இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கு எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

