இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்த அவர், “மத்திய தலைமை, குறிப்பாக அமித்ஷா, எனக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். பாஜகவில் பணியாற்றி கட்சியின் வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, காங்கிரஸ் கட்சியில் 23 ஆண்டுகள் பணியாற்றிய பிறகுதான் எம்.எல்.ஏ சீட் கிடைத்தது. ஓராண்டு காலம் உழைத்த பிறகு பதவிகள் கிடைக்கும் என்று கட்சி உறுதி கொடுத்து உள்ளது. காங்கிரஸ் கட்சியில் பயணித்து இருந்தால் எனக்கு எம்.பி பதவி கிடைக்குமா என்று தெரியாது.” என்று கூறினார்.

