• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அண்டை நாடுகள் மீது இனி தாக்குதல் இல்லை: மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர் – “இஸ்ரேல், அமெரிக்காவிடம் ஒருபோதும் சரணடையமாட்டோம்” – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
March 7, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அண்டை நாடுகள் மீது இனி தாக்குதல் இல்லை: மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர் – “இஸ்ரேல், அமெரிக்காவிடம் ஒருபோதும் சரணடையமாட்டோம்” – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
அண்டை நாடுகள் மீது இனி தாக்குதல் இல்லை: மன்னிப்பு கேட்ட ஈரான…

ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததையடுத்து, ஈரான் புரட்சிகர ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகங்கள் மற்றும் விமான நிலையங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தி வந்தது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொண்ட தாக்குதல்கள் ஒரு வாரத்தை எட்டியுள்ள நிலையில், அண்டை மத்திய கிழக்கு நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததையடுத்து, ஈரான் புரட்சிகர ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகங்கள் மற்றும் விமான நிலையங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தி வந்தது.

இந்த சூழ்நிலையில், அண்டை நாடுகளிலிருந்து ஈரான் மீது நேரடித் தாக்குதல் நடத்தப்படாத வரை, அந்த நாடுகளை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தாது என்ற முடிவை எடுத்துள்ளதாக அதிபர் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவிற்கு ஈரானின் இடைக்கால தலைமை கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும் அவர் வலியுறுத்தினார். “ஈரான் மக்கள் சரணடைய வேண்டும் என்ற எதிரிகளின் ஆசை அவர்களின் கல்லறைகளுக்கே செல்லும்,” என்று அவர் அரசு தொலைக்காட்சியில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

ஈரான் அதிபரின் இந்த அறிவிப்பால் மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் வரும் நாட்களில் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இன்று தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலில் தெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையம் தீப்பிடித்து கடுமையான சேதத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டு தாக்குதல்களில் இதுவரை ஈரானில் 1000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அமெரிக்கா நடத்தியதாக கூறப்படும் ஒரு தாக்குதலில் ஈரானில் உள்ள தொடக்கப்பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் உயிரிழந்த 160 சிறுமிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

இந்திய அணி ரசிகர்களின் இதயங்களை உடைக்கத் தயார்! ஃபைனலுக்கு முன் ஸ்டேட்மென்ட் கொடுத்த நியூசி. கேப்டன்.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post

அமெரிக்காவிற்கும் ஈரானுக்குமிடையில் இருதலைகொள்ளி எறும்பாக மாட்டிக்கொண்ட இலங்கை!

Next Post
அமெரிக்காவிற்கும் ஈரானுக்குமிடையில் இருதலைகொள்ளி எறும்பாக மாட்டிக்கொண்ட இலங்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்குமிடையில் இருதலைகொள்ளி எறும்பாக மாட்டிக்கொண்ட இலங்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin